• Fri. Mar 29th, 2024

டிச.4ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Nov 28, 2022

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநிலமுதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *