சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 108 குடியுரிமை கவுண்டர்கள், 100, பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் ஆறு கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், வரும் 25ம் தேதியில் இருந்து, சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

சென்னை-டாக்கா-சென்னை இடையே இயக்கப்படும், us பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், முதல் விமானமாக, சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முன்னையத்திற்கு வந்து செல்கிறது.

சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, மாசற்ற ஒரு நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய, தமிழ்நாட்டு கலாச்சாரம், புரதாண நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், போன்றவைகளின் ஓவியங்களுடன், கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்

. இனிமேல் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் கண்வயர் பெல்ட்கள் 6, அதிநவீன லிப்ட்டுகள் 17, எஸ்கலெட்டர்கள் 17, வாக்கலேட்டர்கள் 6, பயணிகள் உடைமைகள் பரிசோதனை அதி நவீன கருவிகள் 3 அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டுள்ளதால், விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு ஓடுபாதையில், காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம் வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி செவ்வாய் அன்று தொடங்குகிறது. அன்று பகல் 12:55 வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும், யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கி பயணிகள், வருகை பகுதி வழியாக வெளியில் வருவார்கள். அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு, புதிய முனையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டு செல்லும்.

அதைத்தொடர்ந்து வேறு சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும். ஆனால் சிறிய ரக விமானங்கள் மட்டுமே சோதனை காலங்களில் இங்கு வந்து செல்லும். சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில், வருகின்ற மே மாதத்தில் இருந்து, இந்த புதிய முனையத்தில், பெரிய ரக, மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும்.
மேலும் ஏற்கனவே பழைய முனையத்தில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகங்கள், அரசுத் துறைகளான போலீஸ், பாதுகாப்பு, உளவுத்துறை உள்ளிட்ட அலுவலகங்களும் இந்த புதிய முனையங்களுக்கு முனையத்திற்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதோடு புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக டூட்டி ஃப்ரீ ஷாப் உணவு ஸ்டால்கள் போன்றவைகளும் அமைக்கப்பட்டு, அவைகளும் ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து இந்த புதிய முனையத்தில் செயல்பாட்டில் இருக்கும்.
புதிய முனையம் செயல்பட தொடங்கிய பின்பும், சில காலம் பழைய முனையம் செயல்பாட்டில் ஒரே நேரத்தில் புதிய பழைய முனையங்கள் செயல்படும்.இந்தப் புதிய முனையம், முழு செயல்பாட்டுக்கு வந்த பின்பு, ஏற்கனவே சர்வதேச முனியமாக உள்ள டி4, உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். அதோடு டி3 எனப்படும் தற்போதைய சர்வதேச முன்னையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் உடைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட பணியான, ஃபேஸ் 2 கட்டடப் பணிகள் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]