

டிசம்பர் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டர் பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டபணியில் 6 அடுக்கு மல்டிலெவல் கார் பார்க்கிங், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டர்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன. விமான நிலைய முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், திறப்பு விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கும் சென்னை விமான நிலைய புதிய நவீன முனையத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதைதொடர்ந்து 2-ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாட்டிற்கு தமிழரின் தொன்மைக்கு சான்றாய்த் திகழும் கீழடியில் இருந்து சுடரோட்டம் துவக்கம்…உலக தமிழர் பேரமைப்பின் சார்பில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாடு தஞ்சையில் நடைபெறுகிறது. … Read more
- சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கரில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா, கட்டியணைத்துப் பாராட்டிய மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாமன்னன் பாடலால் நிகழ்ந்த அற்புதம் !!தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக … Read more
- கள்ளக்காதலில் கருத்து வேறுபாடு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே காவலர்கள்…கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் மதுரை அருகே … Read more
- ராஜபாளையம் அருகே மூதாட்டி கொலை.., குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் … Read more
- முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், … Read more
- அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர்… எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..,அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் என்று அனுஷ வைபவ விழாவில் எழுத்தாளர் … Read more
- சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக். இயக்குநர் நந்தா பெரியசாமி … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி … Read more
- படித்ததில் பிடித்தது தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?கொச்சி … Read more
- குறள் 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் … Read more
- “இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமா வளவன்மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில், “இந்த கிரைம் தப்பில்ல” என்ற திரைப்படத்தின் … Read more
- சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..,மதுரை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் … Read more
- ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை..,மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25. … Read more
- அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் … Read more