

சந்திராயன் – 3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதை யடுத்து, திட்டஇயக்குநரின் தந்தை என் மகன் பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாகத் திகழ்கிறார் என்று பெருமைப்படுவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – என்கிற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, இவன் தந்தை என்று பெருமைப்படும் அளவிற்கு சந்திராயன் 3 திட்டத்தில் வெற்றி பெற்று தந்தைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல்.
சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவியல் தரையிறங்கி உள்ள நிலையில், சந்திரயான்3 மிஷனின் திட்ட இயக்குனராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தந்தையை ஊடகத்துறையினர் சந்தித்து பேசி வருகின்றனர்.
சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். திருச்சியில் மேற்படிப்புகளை முடித்தார். பின்னர் இஸ்ரோவில் 2004ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருக்கு 2019ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சந்திரயான்3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை (2023, ஆகஸ்டு 23ந்தேதி மாலை 6.04மணி அளவில்) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் வ.உ.சி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞானி வீரமுத்துவேலை தொலைப்பேசியின் வாயிலாக தொடர்புகொண்டு, சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இதுகுறித்து கருத்துதெரிவித்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்..,
வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கு… எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பதில் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வீரமுத்துவேலின் தந்தை, தனது மகனை நாட்டுக்காக ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்து உள்ளார். ,”சந்திரயான்-3 திட்டம் எனது மகனுக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வீட்டிற்கு கூட வரமால் இதற்காக பணியாற்றினார். நிலவின் தென் துருவத்தில் அனுப்பி இந்தியா வெற்றி கண்டுள்ளது, இந்தியா வல்லரசு நாடாட மாறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூட வேண்டும்.
விடாமுயற்சியுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய எனது மகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் பெயரை போலவே பெரும் வீரத்துடன் செயல்பட்டுள்ளார். இது இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் புகழை சேர்த்துள்ளது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றதில் இருந்து வீட்டிற்கும் வருவதில்லை, என்னிடமும் சரியாக பேசியதில்லை. மேலும், இந்தியாவுக்காகவே எனது மகனை ஒப்புக்கொடுத்து விட்டேன்” என அவர் பேசினார்.
- பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று (செப்.,28) … Read more
- ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் … Read more
- ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் … Read more
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு … Read more
- குற்றவழக்குகளில் தொடர்புடையவருக்கு பா.ஜ.க.வில் பதவி..!இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி … Read more
- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வாச்சாத்தி … Read more
- ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் … Read more
- குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்..!அதிமுகவில் குமரி கிழக்கு மாவட்டச் செயலளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலையில் ஒன்றுபட்ட குமரி … Read more
- சிவகாசி அருகே, பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து..!விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் … Read more
- திருப்பங்கள் தந்திடும் திருப்பாம்பரம் கோயிலில் இராகு,கேது பெயர்ச்சி !அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும்இந்த எட்டு … Read more
- நற்றிணைப் பாடல் 260:கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று … Read more
- சிந்தனைத்துளிகள்உலகில் இருக்கக் கூடிய பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.எந்தப் பழம் அதிகச் சுவையுடையது, … Read more
- பொது அறிவு வினா விடைகள்ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP). இந்தோசீனா போர் 1946 – ஏப்ரல் 1975 க்கு … Read more
- குறள் 537:அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். பொருள் (மு.வ): மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) … Read more
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more