• Thu. Apr 25th, 2024

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு..

ByA.Tamilselvan

Nov 9, 2022

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். இவர், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்துவைத்தார். 1959-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். அவர் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை பொறுப்பு வகிப்பார். புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். மிக நீண்டகாலம் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமை பெற்ற அவர், 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல், 1985-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி வரை இந்த பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *