• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் விழா..,

BySeenu

May 14, 2026

கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் விழா நடந்தது, இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ,விபத்து காப்பீடு இலவசமாக சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் நிறுவனர் கைத்தறி முருகேசன், பங்குதாரர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலவசமாக காப்பீடு வழங்கிய சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் பெரும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.