தமிழக மாணவர்களுக்கு ரயில்வேதேர்வு எழுத ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி 700 கிமீக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையங்களை ஒதுக்குவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.