• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 476

குறள் 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும் பொருள் (மு.வ) ஒரு மரத்தின்‌ நுனிக்கொம்பில்‌ ஏறியவர்‌, அதையும்‌ கடந்து மேலும்‌ ஏற முனைந்தால்‌, அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்‌.

குறள் 475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின் பொருள்(மு.வ) மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்‌, அந்தப்‌ பண்டமும்‌ (அளவோடு ஏற்றாமல்‌) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால்‌ அச்சு முறியும்‌.

குறள் 474

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும் பொருள் (மு .வ) மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்‌. தன்‌ வலிமையின்‌ அளவையும்‌ அறியாமல்‌, தன்னை வியந்து மதித்துக்‌ கொண்டிருப்பவன்‌ விரைவில்‌ கெடுவான்‌.

குறள் 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர் பொருள் ( மு.வ): தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

குறள் 472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல் பொருள் (மு.வ): தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் பொருள்:(மு.வ) செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். பொருள் (மு.வ): செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

குறள் 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு பொருள் (மு.வ) தம்‌ நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்‌ ஏற்றுக்‌ கொள்ளாது. ஆகையால்‌ உலகம்‌ இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌…

குறள் 469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை பொருள் (மு.வ) அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்‌ பொருந்துமாறு செய்யாவிட்டால்‌ நன்மை செய்வதிலும்‌ தவறு உண்டாகும்‌.

குறள் 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும் பொருள்(மு.வ) தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.