• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 489

குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல் பொருள் (மு.வ): கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.

குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை பொருள்(மு.வ): பகைவரைக்‌ கண்டால்‌ பொறுத்துச்‌ செல்ல வேண்டும்‌; அப்‌ பகைவர்க்கு முடிவுகாலம்‌ வந்தபோது அவருடைய தலைகீழே விழும்‌.

குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர் பொருள்(மு .வ): அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌. வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து பொருள் ( மு.வ): ஊக்கம்‌ மிகுந்தவன்‌ (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்‌, போர்‌ செய்யும்‌ ஆட்டுக்கடா தன்‌ பகையைத்‌ தாக்குவதற்காகப்‌ பின்னே கால்வாங்குதலைப்‌ போன்றது.

குறள் 484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின் பொருள் (மு.வ): (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். பொருள் (மு.வ): (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

குறள் 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. பொருள் (மு.வ): காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது பொருள் (மு . வி): காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌.

குறள் 480

உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும் பொருள் (மு. வ): தனக்குப்‌ பொருள்‌ உள்ள அளவை ஆராயாமல்‌ மேற்கொள்ளும்‌ ஒப்புரவினால்‌, ஒருவனுடைய செல்வத்தின்‌ அளவு விரைவில்‌ கெடும்‌.

குறள் 479

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும் பொருள் (மு.வ) பொருளின்‌ அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்‌) இருப்பது போல்‌ தோன்றி இல்லாமல்‌ மறைந்து கெட்டுவிடும்‌.