• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 498

குறள் 498

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும் பொருள் (மு.வ): சிறிய படை உடையவனுக்குத்‌ தக்கதாக உள்ள இடத்தில்‌ பொருந்தி நின்றால்‌, பெரிய படை உடையவன்‌ தன்‌ ஊக்கம்‌ அழிவான்‌.

குறள் 497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின் பொருள் (மு.வ): (செய்யும்‌ வழிவகைகளைக்‌) குறைவில்லாமல்‌ எண்ணித்‌ தக்க இடத்தில்‌ பொருந்திச்‌ செய்தால்‌, அஞ்சாமை அல்லாமல்‌ வேறு துணை வேண்டியதில்லை.

குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து பொருள் (மு.வ): வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள்‌ கடலில்‌ ஓடமுடியாது; கடலில்‌ ஓடுகின்ற கப்பல்களும்‌ நிலத்தில்‌ ஓடமுடியாது.

குறள் 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற பொருள் (மு.வ): ஆழமுள்ள நீரில்‌ முதலை மற்ற உயிர்களை வெல்லும்‌; ஆனால்‌ நீரிலிருந்து நீங்கி வந்தால்‌ அந்த முதலையையும்‌ மற்ற உயிர்கள்‌ வென்று விடும்‌.

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.

குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும் பொருள் (மு.வ): மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்‌ அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப்‌ பயன்களையும்‌ கொடுக்கும்‌.

குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது.

குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.