• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 507:

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. பொருள் (மு.வ): சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

குறள் 505:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் பொருள் (மு.வ): மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

குறள் 504:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.பொருள் (மு.வ):ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

குறள் 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு பொருள் (மு.வ): அரிய நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்து குற்றம்‌ அற்றவரிடத்திலும்‌ ஆராய்ந்து பார்க்குமிடத்தில்‌ அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்‌.

குறள் 503:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.பொருள் (மு.வ):அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு பொருள் (மு.வ): நல்ல குடியில்‌ பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப்‌ பழியான செயல்களைச்‌ செய்ய அஞ்சுகின்ற நாணம்‌ உடையவனையே நம்பித்‌ தெளிய வேண்டும்‌.

குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் பொருள் (மு.வ): அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

குறள் 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு பொருள் ( மு.வ): வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.

குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது பொருள்(மு.வ) அரணாகிய நன்மையும்‌ மற்றச்‌ சிறப்பும்‌ இல்லாதவராயினும்‌ பகைவர்‌ வாழ்கின்ற இடத்திற்குச்‌ சென்று அவரைத்‌ தாக்குதல்‌ அரிது.