• Wed. Apr 24th, 2024

வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்!..

Byமதி

Oct 12, 2021

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாக்குகளை எண்ணும் இடங்களில் பல்வேறு குளருபடிக்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருவதை பார்த்துவருகிறோம். இந்த நிலையில் பல்வேறு காமெடியான நிகழ்வுகளும் அங்கங்கே நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது வார்டு எண் 1 இல் அளிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை எண்ணிய தேர்தல் அதிகாரிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏனெனில் அந்த வார்டில் வாக்களித்த இருவர் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக பூத் சிலிப்பை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரி பூத் சிலிப்பை காட்டினார். மேலும் அவர் கூறுகையில் யாரோ இருவர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

ஒருவேளை சினிமா படத்தில் வருவது தாங்கள் இருவரும் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என காண்பிப்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என்றார்.

இது போல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை, சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது வடிவேலு படத்தில் வரும் காமெடியை நினைவூட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *