நெல்லை பாளையங்கோட்டை ராம்நகர் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்திற்கான பட்டன் வேலை செய்யாததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 933 வாக்குச்சாவடிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட ராம்நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 316வது வாக்குச் சாவடியில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராம்நகர் பள்ளியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதில் 316வது வாக்குச் சாவடியில் பொது மக்கள் வாக்களிக்கும் போது இவிஎம் மிஷினில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய இடத்தில் உள்ள பட்டன் வேலை செய்யாததால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்து நிமிடத்தில் இயந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென பாஜக சின்னத்துக்கான பட்டன் இயந்திரத்தில் வேலை செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]
- தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணிதென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் […]