• Thu. Mar 28th, 2024

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி

ByA.Tamilselvan

Sep 2, 2022

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடித்ததில் மதகுரு உள்ளிட்ட 18 பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 21-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *