கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 1,184 இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 498 இடங்களை கைப்பற்றி உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு 437 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
58 உள்ளாட்சி அமைப்புகளில் 1,184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 498 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 42.06% வாக்குகள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.)க்கு 437 வார்டுகள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 36.90% வாக்குகளே கிடைத்திருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 45 வார்டுகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு மொத்தம் 3.8% வாக்குகள் கிடைத்துள்ளன.
66 சிட்டி முனிசிபல் வார்டுகளில் காங்கிரஸ்-61; பாஜக- 67; ஜேடிஎஸ்- 12 இடங்களில் வென்றுள்ளன. 441 டவுன் முனிசிபல் வார்டுகளில் காங்கிரஸ்- 201; பாஜக- 176; ஜேடிஎஸ் 21 இடங்களைப் பெற்றுள்ளன. பட்டன பஞ்சாயத்துகள்: மொத்தம் உள்ள 588 வார்டுகளில் காங்.- 236; பாஜக-194; ஜேடிஎஸ்-12 இடங்களில் வென்றுள்ளன.
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்திருப்பது அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசுகிறது என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. பணம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்ற பாஜகவின் அணுகுமுறையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸுக்கு மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம் என கூறியுள்ளார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]