• Sat. Apr 20th, 2024

உண்டியல் சேமிப்பை
ராகுலிடம் அளித்த சிறுவன்

பாதயாத்திரையின்போது தனது உண்டியல் சேமிப்பை சிறுவன் ஒருவன் ராகுல்காந்தியிடம் அளித்தான்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் நடந்து சென்றான். அப்போது, எல்லோரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரிடம் கூறினான். பெற்றோர் அன்றாடம் அளிக்கும் பணத்தில், தான் சேமித்து வைத்த உண்டியலை ராகுல்காந்தியிடம் அளித்தான். நடைபயண செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தான். அதை ராகுல்காந்தி பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *