இயக்குனர் பாரதிராஜா நாளுக்கு நாள் தேறி வருகிறார் என கவிஞர் வைரமுத்து தகவல்
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரை சந்தித்த கவிஞர் வைரமுத்து அவர் நலமுடன் இருக்கிறார் ,விரைவில் மீண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் பாரதிராஜாவை நலம் விசாரித்த பின்னர் பேசிய அவர் “பாரதிராஜா நாளுக்கு நாள் தேறிவருகிறார்.அச்சப்படுவதற்கு ஆதாரமில்லை வதந்தி பரப்புவதற்கு வாய்பே இல்லை என்றார்.