ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 2 டேபிள் ஸ்பூன் இளநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பஞ்சு உருண்டையைப் பயன்படுத்தி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் கருமை நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.



