சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக 1983ல் இருந்து யுனெஸ்கோ அறிவித்ததன் படி தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையில் தொன்மை போற்றுதும் என்னும் பொருண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்க தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர், முனைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் வெண்ணிலா வரவேற்புரைத்தார், சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா நோக்கவுரையாற்றினார்.அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி , சிவகங்கை தொல் நடைக் குழு செயற்குழு உறுப்பினர்கள் வித்யா கணபதி , சையது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை தொல்லியல் அலுவலர் பா.ஆசைத்தம்பி தமிழக தொல்லியல் ஆய்வுகளின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் கருத்துரைக்கும் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் மேற்பரப்பில் கேட்பாரற்று
அதன் முக்கியத்துவம் அறியாமல் சிதைந்து வருகிறது. கற்சிற்பம், கல்வெட்டு, பழமையான தொல்லியல் எச்சங்களை சில சமூக விரோதிகள் சீரழிவு ஏற்படுத்தி வருகின்றனர். வரலாற்று சின்னங்களை பாதுகாக்க மாணவர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
காலந்தோறும் தமிழகத்தில் கோவில் கட்டிடக்கலை என்னும் தலைப்பில் கருத்துரைத்த மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் கண்ணன் கோவில் கட்டுமானங்களில் காணப்படுகின்ற ஒவ்வொரு சிற்பத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். குறிப்பாக கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ,கொடிமரம் மற்றும் கோவில் கோபுரம் கட்டமைப்பு முறை பற்றி மாணவர்களிடம் எடுத்து உரைத்தார் .கட்டமைப்பு முறை, கால கணிப்பு முறையும் அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நிகழ்விற்கு சிவகங்கை தொல்நடைக் குழுவின் பெருமைமிகு வழிகாட்டி தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைவர் சுந்தர்ராஜன் ,செயலர் நரசிம்மன், உறுப்பினர் கள் ஆறுமுகம், சரவணன், இந்திரா, சிவகங்கை தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் காசி. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் குமரமுருகன் ,சுரேஷ் ,அஸ்வத்தாமன், வாஹினி, ஜெயஈஸ்வரி ஏற்பாடு செய்தார்கள் உலக மரபு நாள் விழாவில் பங்கு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி கோகுல சுந்தரி நன்றி கூறினார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]