விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காரியாபட்டி வேப்பங்குளத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகர் மனோகரன் தாயாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு அன்ன தானம் வழங்கி னார். கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன், வேப்பங்குளம் மனோகரன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
