• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்காளத்தில் பாலியல்,கொலை சம்பவங்களை கண்டித்து தேனியில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

ByJeisriRam

Aug 31, 2024

தேனியில் ஏ ஐ டி யு சி சார்பில், மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வரும் RG. Kar மருத்துவக் கல்லூரி பற்சி மாணவி மோமிதா ரெப்நாத் -தை. கூட்டுபாலியல் செய்து கொலை செய்தவர்களையும் பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் எம் எஸ் பி ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வீ பாண்டி மாவட்ட பொருளாளர் T. சென்றாய பெருமாள் துணை தலைவர்கள் கலா பரமையா கர்ணன் செயலாளர்கள் ஞானவேல் சகா உதயசூரியன் ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் பேயதேவன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ அழகேஸ்வரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் மொக்க மாயன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தூய்மை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் கல்லு உடைக்கும் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை மருத்துவ பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின்மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஏ ஐ டி யு சி தோழர்கள் பங்கு பெற்றனர்.