மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஒற்றை விரலால் சொல்லி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் துவங்கும் இப்பாடலில் யார் மொழியை மதத்தை திணித்து அடக்க முயன்றாலும் அடங்க மாட்டோம் என பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.