• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குமரியில்அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் கன்னியாகுமரி நகராட்சி 3 வது வார்டுக்குள்பட்ட சுவாமிநாத பரம் பகுதியில் வீடு, வீடாக அதிமுக சாதனை விளக்க துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர்முத்துசாமி முன்னிலை வகித்தார். திரைப்பட இயக்குனரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் துண்டுப் பிரசுரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் .தங்கவேல், மாவட்ட ஜெ. பேரவை தலைவர் வழக்கறிஞர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், அதிமுக நிர்வாகி சுயம்புலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.