• Wed. Mar 19th, 2025

அஇஅதிமுக பொறுப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை

ByS.Ganeshbabu

Mar 6, 2025

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் பொறுப்பாளர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு ஆர் எம். பாபு முருகவேல் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில்
பூத் கிளை அமைப்பது தொடர்பான களப்பணிகளை, மாவட்ட கழக செயலாளர் திரு ஓ எஸ் மணியன் அவர்களுடன் கீழ்வேளூர் ஒன்றிய கழக செயலாளர் எம் சிவா அவர்களுடன் மாவட்ட கழக நிர்வாகிகளும் ஒன்றிய கழக நிர்வாகிகளும் ஊராட்சி கழக செயலாளர்களும் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டார்.