மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவிற்கு வருவார்களா என எதிர்பார்த்த நிலை மாறி பாஜகவில் இருந்து திராவிட கட்சிக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது, பாஜகவில் இருந்து செல்லும் நிர்வாகிகளை வாழ்த்தி வழியனுப்பி வைப்பது தான் மரபு, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பதவி வகித்து வருகிறார்கள், தமிழகத்தில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மேனேஜர் போல இருப்பார்கள், அண்ணாமலை என்பவர் தலைவன், தலைவனுக்கே உரிய பண்புகளில் முடிவு எடுப்பேன், கலைஞர், ஜெயலலிதா போல சில அதிரடி முடிவுகளை எடுக்க தான் வேண்டும்,
டெல்லியில் சொல்லி கொடுத்து விடுவார்கள் என கவலை கொள்ளாமல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன், பாஜகவில் இருப்பவர்களை தலைவர்களாக மாற்றி வருகிறோம், அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, தமிழகத்தில் பாஜக தெளிந்த நீரோடையாக செயலாற்றி வருகிறது, தமிழக அரசியல் வரலாற்றில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை, பஜகவின் இலக்கு 2026 அதனை நோக்கியே பயணித்து வருகிறோம், அண்ணாமலை பாஜகவில் பதவிக்காக வரவில்லை, பெயருக்கு பின்னால் இருந்த ஐ.பி.எஸ் எனும் பட்டத்தை தூக்கி வீசி விட்டு வந்தேன், தமிழகத்தில் தமிழை, தமிழக மக்களை வைத்து தான் அரசியல் செய்ய முடியும், தமிழகத்தில் புது விதமான அரசியலை பாஜக மட்டுமே கொண்டு வர முடியும், பாஜகவின் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் கட்ட தலைவர்களை இழுத்து தான் தங்கள் கட்சியை வளர்க்க முடியும் எனும் நிலை வந்துள்ளது, திமுகவில் ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டி போட்டு கொண்டு தங்களை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள், தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக செயல்படுகிறது, மாறாக பிரச்சினைகளை உருவாக்க பாஜக செயல்படவில்லை, பாஜக மீது முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக ஐ.எஸ்.எஸ் தீவிரவாதி முதல்வருக்கு தொலைபேசியில் அழைத்து சொன்னாலும் முதல்வர் சிலிண்டர் வெடித்தது என கூறுவார், சாமானிய மக்கள் மட்டுமே பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள், அதை தனியாருக்கு கொடுப்பது தவறு, உதயநிதி ஸ்டாலினை நாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள கூடாது, அவருக்கு நீட் தேர்வில் கேட்கப்படும் கணிதத்தை கூட போட தெரியாது, எப்ரல் 14 ஆம் தேதி திமுகவின் ஊழல் பட்டியல் வெளியீடுவேன், திமுகவினர் ஆட்சிக்கு வந்த பின் 2 இலட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளனர், திமுகவின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இணையதளத்தில் வெளியீடுவேன், அதிமுகவும், பாஜகவும் கொள்கையின் அடிப்படையில் வேறு வேறு பாதையில் பயணிக்கிறது, தமிழக காவல்துறையினை முதல்வர் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்” என பேசினார்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]