குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 இன் படி குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்த பயிற்சி முகாமை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து உரையாற்றினார். பயிற்சி முகாமில் மதுரை மற்றும் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள், மதுரை நெல்லை மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு இயக்குனரகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இப்பயிற்சி முகாம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல தொழிலாளர் நல இணை ஆணையாளர் சுப்பிரமணியன் வரும் 2025 டிசம்பர் 31 க்குள் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இருக்கக் கூடாது என மாநில அரசு மாநில செயல்திட்டமும், மாநில செயலாக்க நடைமுறைகளும் அமல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது என்றும் அதற்கான தொடர் நடவடிக்கைகள் துறை சார்பில் எடுக்கபட்டு வரும் நிலையில் இது தொடர்பான அலுவலர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
குழந்தை தொழிலாளர்களுக்கு உருவாவதற்கு காரணம் வறுமை என்பதால் வறுமையை ஒழித்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் மதுரை மண்டலத்தில் 100 குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மீட்டெடுக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது என்றும், அந்த குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மதுரை மண்டல தொழிலாளர் நல இணை ஆணையாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]