மதுரையில் மு க அழகிரி தீவிர ஆதரவாளரான எஸ் ஆர் கோபி தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை தமிழக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எஸ் ஆர் கோபி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் நினைத்துக் கொண்டனர். உடன் முன்னாள் அமைச்சர் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே செல்லூர் ராஜு இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்த முன்னாள் துணை மேயர் பி எம் மன்னன் உள்ளிட்ட இருந்தனர். தொடர்ந்து அழகிரியில் ஆதரவாளர்கள் அதிமுக இணைவது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது என கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.







