விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது.
37 சவரன் தங்க நகைகள்,42 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கூடுதல் ஆணையர் அன்பு இவ் வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த காவல் அதிகாரிகளை பாராட்டினர்.
சென்னை, வடபழனி, குமரன் காலனி, என்ற முகவரியில் தனியார் போட்டோ லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார், என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளியூர்சென்று விட்டு கடந்த 28.02.2023 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்த சுமார் 33 சவரன் தங்க நகைகள், 57 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,25,000/-திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூன்று காவல் உதவி ஆணையர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விசாரணையில் கொள்ளை அடித்த நபர் பழைய குற்றவாளியான அயபக்கம் பகுதியைச் சேர்ந்த முத்து என தெரிய வந்தது.
மேலும் சந்தோஷ்குமார் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள்,மற்றும் ரொக்கப்பணத்தை திருடியுள்ளதும் தெரியவந்தது.அதன்பேரில் மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அவரிடமிருந்து சுமார் 37 சவரன் தங்க நகைகள், 42கிலோ வெள்ளி கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட முத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்,ஒட்டுமொத்தமாக 51,20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பத்திரமாக வைத்துள்ளோம்.
10:02:2023 அன்று நடந்த பெரும்புர் கொள்ளை வழக்கில் கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இரு குற்றவாளிகளை கைது செய்து கொள்ளும் பின்பு பெங்களூரில் உள்ள போலீஸ் உதவியுடன் கங்காதரன் மற்றும் ஸ்டீபன் என்கின்ற ரித்தீஷ் ஆகிய இரு முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்தோம், இந்த வழக்கில் 8 புள்ளி ஒரு கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருக்கின்றது இது குறித்து போலீஸ் காவலில் இருந்து விசாரித்து வருகிறோம், இதில் ஏற்கனவே இரண்டு புள்ளி மூன்று கிலோ தங்கத்தை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மேற்கொண்டு ரெண்டு புள்ளி ஒன்னு கிலோ தங்கத்தை இப்பொழுது நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம், மீண்டும் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ளோம், மேலும் இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக்கி உள்ளார்கள் அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்என காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு (IPS) கூறினார்.
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]