கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வரும் திரு செந்தில்குமார், குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதால் அதற்கு குடிநீர் இணைப்பு கேட்ட நபர் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது .

ஊராட்சி செயலாளர் இது போன்ற பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிகிறது . மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





