• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் பிடிபட்ட நகைக்கடை வியாபாரி..,

ByK Kaliraj

Mar 17, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் சோதனை சாவடியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்ட போது மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் நகைக்கடை வியாபாரி ரூபாய் 90, 73,184 மதிப்பிலான 619.330 கிராம் எடை கொண்ட 77.42 பவுன் நகைகளை எந்த ஆதாரம் இன்றி கொண்டு சென்ற போது வாகன சோதனை செய்யும் போது பிடிபட்டார்.

உடனடியாக பிடிபட்ட நகைகளை நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சரண்யா எஸ் எஸ் ஐ சங்கரநாராயணன் குழுவினர் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.