• Sun. Apr 28th, 2024

இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம்… மாநாடு குமரி மக்களவை உறுப்பினர் பங்கேற்பு..,

குமரி மாவட்டத்தில் பாரம்பரிய வைத்தியர்கள் இயல்பாகவே அதிக எண்ணிக்கையில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பாரம்பரிய வைத்திய சாலைகள் இன்றும் குமரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இன்றைய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பாரம்பரிய வைத்தியர்கள்,அவர்களது வாரிசுகள் (தந்தையிடம் வைத்திய முறையை) கற்றவர்கள் இன்றும் வைத்தியம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் எஸ்.சுரேஷ் குமார் பேசும் போது, ஒட்டுமொத்த இந்தியாவில் பாரம்பரிய வைத்திய த்தில் மருத்துவத்தை தொழிலாக கொண்டவர்கள் 30,000_க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.

இதில் பாரம்பரிய வைத்தியர்கள் வாழையடி வாழை போல் இருப்பவர்களை கடந்து.அரசு அங்கிகாரம் பெற்ற மருத்துவம் படித்து உரிய சான்றுகளுடன் இருப்பவர்கள் என்ற இரு நிலையை கடந்து, வைத்திய குடும்ப வழித்தோன்றல் என்ற நிலையில் வைத்தியம் முறையாக செய்ய முடியாத ஒரு கூட்டம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இருக்கிறார்கள். இந்தியாவின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு மருத்துவ கல்வி நிறுவனத்தில் ஒரு சர்டுபிக்கெட் வாங்கி வைத்து கொண்டு மருத்துவம் பார்ப்பதில் ஏற்படும் பிரச்சனையால் முறையாக வைத்தியம் பார்ப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

பாரம்பரிய வைத்தியர்கள் ஆங்கிலம் வைத்தியம் போல் நோயாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தக்கூடாது என்ற தடை உள்ளது.

அரசின் ஆணையை பாரம்பரிய வைத்தியர்கள் முறையாக பின்பற்றினாலும்,

நாட்டில் அங்கொன்று,இங்கொன்று என ஏற்படும் உயிர் இழப்பு
நம்மையும் பாதிக்கிறது. பிடிபடும் நபரால் பத்திரிகைகளில் போலி மருத்துவர் கைது என வரும் செய்திகள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதால் மருத்துவம் என்பது உயிர் காக்கும் பணி என்பதை நம்மவர்கள் உணர்ந்து பணி யாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்வில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று பேசிய போது. பாரம்பரிய வைத்தியர்கள் தொடர்ந்து மருத்துவ பணியை தொடரும் வகையில் ஒன்றிய அரசு இந்த மாநாட்டில் வைத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் உதவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

நிகழ்விற்கு தலைமை வகித்தார் மரு.எஸ்.ஆர்.பெனிஸ்ராஜா,மானாட்டு தீர்மானத்தை முன் மொழிந்தார் மரு.சி.ஜாண்சன் டேவிட், தமிழகம் முழுவதும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள். கருங்கல்லில் நடைபெற்ற இந்தியன் கிளினிக் மருத்துவ சங்கம் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *