• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சென்னை – மைசூரு இடையே செல்லும்
வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்

இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் புதுடெல்லி – வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் – மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவின் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்