கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரின் இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூறியபடி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி தினமும் அவர் மீது ‘கங்காஜல்’ (புனித நீர்) தெளிப்பார் என்று கூறினர். ஆனால் வருமான வரித்துறை ஊழியர் இருதய சுவாச நோய்க் காரணமாக ஏப்ரல் 2021ல் இறந்துள்ளார்.