சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மேட்டுப்பட்டி அடுத்து வெள்ளாளகுண்டம் அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு 45 அடி உயரத்தில் அதிகார நந்தியை நிறுவ வேலைகள் நடைபெற்றுவருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த நந்தி சிலையை மலேசிய பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் சிற்பி தியாகராஜன் அவர்களால் வடிவமைக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு பொருள் உதவி செய்பவர்களுக்கு பல நாட்களாக உள்ள பிரச்சனை தீர்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும், வேண்டுதல்கள் எதுவாயினும் கண்டிப்பாக நிறைவேறும் என்பது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.