• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி

ByA.Tamilselvan

Sep 11, 2022

கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை கடந்த 7ம் தேதி தொடங்கி ராகுல்காந்தி தற்போது கேரளாவை அடைந்தார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்த அவர், தனது பயணத்தின் போது பல்வேறு அமைப்பினரை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் வித்தியாசமான செயல்கள் செய்த 12 ஊராட்சி மன்ற தலைவர்களையும் அவர் சந்தித்தார். நேற்றுடன் தமிழகத்தில் பாதயாத்திரை நிறைவு செய்ததை அடுத்து, இன்று கேரளாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, கேரளாவில் உள்ள செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.