தமிழகத்தில் +1பொதுதேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் .அதில் எந்தவித குழப்பமும் தேவையில்லை என்றார். மேலும் அரசு வேலைவாய்ப்பு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு 11 ம் வகுப்பு பாடங்கள் மிக முக்கியம் என்றும் தெரிவித்தார்.