எல்.ஐ.சி தனது 66 ஆண்டில் அடியெடுத்து வைத்ததை நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் விமரிசையாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டம் செல்லூரில் உள்ள எல்.ஐ.சி மண்டல அலுவலகத்தில் கொடி ஏற்றி 66வது ஆண்டை வெற்றிகரமாக தொடங்கினர்.
எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இலக்கை நோக்கி நடைபோட திட்டமிட்டுள்ளதால், எல்.ஐ.சி. பங்குகளை விற்க கூடாது என அதன் 66வது ஆண்டு தின தொடக்கத்தில் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.