நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி துரை, இலஞ்சி பேரூர் செயலாளர் முத்தையா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.