உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால் தி.மு.க.,வில் அதிருப்தி நிலவும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக்கி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்ற, எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க., கொங்கு கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியில், 26 வார்டுகள் வரை தி.மு.க., ஒதுக்கியுள்ளது.
மீதமுள்ள, 74 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. ‘சீட்’ ஒதுக்கீடு முடிந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.
ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு ‘சீட்’ ஒதுக்கியதை ஏற்று கொள்ளாத தி.மு.க., கட்சியினர், மாவட்ட செயலாளர்கள் வீடுகளின் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்குதான் வார்டு ‘சீட்’ என்று உறுதியாக இருந்த கட்சியினர், கூட்டணிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கள் கோபத்தை ஆர்ப்பாட்டம், முற்றுகை என்று வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகிய பா.ஜ., தனித்து போட்டியிடுவதால், மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ முழுமையாக அ.தி.மு.க.,வே போட்டியிடுகிறது.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இன்று, மீதமுள்ள அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
ஆளுங்கட்சியில் நிலவும் கூட்டணி ஒதுக்கீடு, ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி, எதிர்ப்புகளை தங்களுக்கு சாதகமாக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
ஆளுங்கட்சியில் ‘சீட்’ கிடைக்காத நபர்கள், சுயேட்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் ‘சீட்’ கிடைக்காத நபர்கள், ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணியாற்றுவது கடினமே.இந்த காரணங்களால், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய வார்டுகளில், அ.தி.மு.க., தனி கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இதனை செய்தாலே மாநகராட்சியில், 30 வார்டுகளை சுலபமாக ஜெயித்துவிடலாம் என்றும், இதுபோக, 20 – 25 ‘சீட்’ எடுத்தாலே கோவை மாநகராட்சி மேயர் நமக்குதான் என்று கணக்கு போட்டு, அ.தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற துவங்கியுள்ளனர்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]