• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர் மாணவியின் புதிய வீடியோ : கைது செய்யபடுகிறாரா அண்ணாமலை ?

ஜனவரி 19 அன்று தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அரசியல் சண்டையையும் தூண்டியுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து மதசாயம் பூசுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளது. தற்போது இரண்டு நிமிடம் 24 வினாடிகள் கொண்ட புதிதாக வெளியான வீடியோவில், விடுதி வார்டனின் கூடுதல் பணியால் தான் தனது படிப்பில் பின் தங்கியதால் லாவண்யா தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்.

லாவண்யா தஞ்சாவூரில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி என்ற தங்கும் விடுதியில் வசித்து வந்தார், மேலும் லாவண்யா இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அரியலூரைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல் என்பவர் லாவண்யா பேசுவதை வீடியோவாக எடுத்துள்ளார்.

லாவண்யாவின் மரணத்திற்கு காரணம், தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாயம் மாற்றம் தான் என பாஜக மற்றும் பல்வேறு இந்து கட்சியினர் வீடியோவை காரணமாக காட்டி மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இருப்பினும், இந்த சமீபத்திய வீடியோவில், லாவண்யா மதமாற்றம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மேலும் இதற்கு முன் வெளியான வீடியோவிற்கு அவர் பயிற்சி பெற்றாரா என்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
புதிதாக கசிந்த வீடியோவில், விடுதியில் உள்ள ஒரு வார்டன் சகாய மேரி தனது படிப்பைத் தவிர ஹாஸ்டலில் கணக்குப் பணியையும் செய்ய வைத்ததாக மாணவி கூறுகிறார், இது தனது கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை.

அக்கவுண்ட்ஸ் வேலை பற்றி தனக்கு முழுமையாக புரியவில்லை என்றாலும், வார்டன் கேட்கவில்லை என்றும், அந்த வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் வீடியோவில் கூறுகிறார்

“எப்போதும் போர்டிங்கில் இருக்கும் சகோதரி என்னிடம் கணக்குகளைச் செய்யச் சொல்வார். ‘இல்லை , லேட்டாக வந்தேன், ஒன்னும் புரியல, அப்புறம் செய்வேன்’ என்று சொன்னாலும் கேட்க மாட்டார்.

‘பரவாயில்லை, நீ முதலில் கணக்குப் பார்த்துக் கொடு, பிறகு உன் வேலையைச் செய்’ என்று சொல்வார். வார்டன் என்னை கணக்குகள் செய்ய வைப்பார். நான் சரியாக எழுதினாலும் தவறென்று சொல்லிவிட்டு ஒரு மணி நேரமாவது என்னை அதில் உட்கார வைப்பார்.

இதன் காரணமாக என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றேன். இது இப்படியே தொடர்ந்தால் என்னால் படிக்க முடியாது என்று நினைத்தேன்” என்று லாவண்யா வீடியோவில் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர் “எல்லோரும் எழுந்தது முதல், நான் கேட்டைத் திறக்க வேண்டும், மோட்டாரை ஆன் செய்ய வேண்டும், எல்லோரும் சாப்பிட்ட பிறகு, மோட்டார் சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்க வேண்டும், இது போன்று வார்டன் எனக்கு எல்லா வேலைகளையும் கொடுப்பார்….” இவ்வாறு அந்த வீடியோவில் லாவண்யா கூறியுள்ளார்.

இந்த புதிய வீடியோவில், விஸ்வ ஹிந்து பரிஷத் முத்துவேல் விடுதி அதிகாரிகள் பொட்டு வைக்க கூடாது என்று கூறினார்களா என்று கேட்கிறார், அதற்கு லாவண்யா எதிர்மறையாக பதிலளித்தார்.

ஜனவரி 17ஆம் தேதி முத்துவேல் மருத்துவமனைக்குச் சென்றபோது தனது போனில் லாவண்யா குறித்து நான்கு வீடியோக்கள் பதிவு செய்துள்ளார். அதில் இரண்டு வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டதாகவும், லாவண்யாவின் இந்த இரண்டாவது வீடியோவை முத்துவேல் தனது தொலைபேசியில் இருந்து நீக்கிவிட்டதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.

அவர் வேறொருவரிடமிருந்து முன்னோடியாகப் பெறப்பட்ட வீடியோவை அவரது தொலைபேசியிலிருந்து விசாரணை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். முத்துவேல் வீடியோவை நீக்கும் முன் வேறு யாருக்காவது பார்வேர்ட் செய்தாரா என்பதும், கடைசியில் அது ஃபார்வர்டாக அவரது போனுக்கு வந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துவேல் எடுத்த நான்கு வீடியோக்களில் ஒரே ஒரு வீடியோவில் மட்டுமே மதமாற்றம் பற்றிய குறிப்புகள் இல்லை. முதல் வீடியோ அவரது தனிப்பட்ட விவரங்களைப் பற்றி பேசுகிறது. இரண்டாவது வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மூன்றாவது வீடியோ தற்போது வைரலாகும் வீடியோவாகும், அதில் லாவண்யா தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாயம் மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நான்காவது வீடியோ அவரது மாற்றாந்தாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா தனது மாற்றாந்தாய் மூலம் துன்புறுத்தப்படுவதாகக் கூறி சைல்ட் லைன் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக வந்த செய்திகள் குறித்தும் அவர் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, கடைசியாக கைப்பற்றப்பட்ட வீடியோவில் லாவண்யா பேசியதை வைத்து பார்க்கும்பொழுது இணையத்தில் வைரலான வீடியோ பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. காரணம் அதில் மத மாற்றம் குறித்த கேள்விக்கு அவர் இருக்கலாம் என்று தான் பதில் கூறி உள்ளாரே தவிர சுய நினைவுடன் சரியாக பதில் கூற வில்லை.

தற்போது புதிதாக கசிந்த வீடியோவில், பொட்டு வைக்க கூடாது என்று அவர் கட்டாயப்படுத்தப்பட்டதைக் கூட மறுத்துள்ளார். இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம், லாவண்யாவின் தந்தையின் மனுவை விசாரித்து, முத்துவேலின் மரணத்திற்குப் பிறகு முதலில் வைரலான வீடியோவை விசாரிக்க அவரது தொலைபேசியை காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதுவரை லாவண்யாவின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி ஜனவரி 21 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். தனது மகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரிய லாவண்யாவின் தந்தையின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகிறது.

இந்த பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக பாஜகவை அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கூற்று முறியடிக்கப்பட்டது. திருக்காற்றுப்பள்ளி சிறுமியின் புதிதாக வெளியிடப்பட்ட வீடியோவில், கட்டாய மத மாற்றத்தின் மீதான துன்புறுத்தலை அந்த பெண் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நான்கு நிமிட வீடியோவில், விஸ்வ ஹிந்து பரிஷித் நபரின் தூண்டுதலின் பேரில் பள்ளியில் யாரும் நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று கூறவில்லை என சிறுமி கூறுகிறார்.

இந்த காணொளி இருப்பதை அண்ணாமலை நன்கு அறிந்திருந்ததாகவும், அதை மீறி திருக்காட்டுப்பள்ளி சேக்ரட் ஹார்ட் பள்ளியால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுமியின் மாற்றாந்தாய் உடல்ரீதியாக துன்புறுத்துவதாக கூறி 1098 என்ற குழந்தை உதவி எண்ணை அழைத்ததையும் அண்ணாமலை அறிந்திருக்கிறார்.
இந்நிலையில் அண்ணாமலை மீது குற்றவியல் சதி, மதக் கலவரத்தை உருவாக்க சதி செய்தல், ஆதாரங்களை நசுக்குதல், வகுப்புக் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புதல் ஆகிய குற்றங்கள் தவிர ஐடி சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.