• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில்பழமையும் பெருமையும் வாய்ந்த கையில் வெண்ணை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலை 7 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது. 9 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் செய்துபெரியாழ்வார் திருமொழி கச்சை கட்டி யதிராசர் கோஷ்டியின் சேவா காலம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம பூஜைகிருஷ்ணர் தொட்டில் வைபவம் தாலாட்டு பாட்டு பாடப்பட்டது.மாலை 6மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இரண்டாம் நாள் வரைகாலை 7:00 மணிக்கு ஆசாரி யார் வரவேற்பும், காலை8.15 முதல் 12.15வரை மூல மந்திர ஹோமங்கள் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 5 மணி வரைகிருஷ்ணர் தொட்டில் வைபவம் தாலாட்டுநடந்தது.

மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிலம்பாட்டம் பொம்மலாட்டம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதன் ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி, அர்ச்சகர் கள் பாகவ தோதமார்கள்மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.