மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில்பழமையும் பெருமையும் வாய்ந்த கையில் வெண்ணை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலை 7 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது. 9 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் செய்துபெரியாழ்வார் திருமொழி கச்சை கட்டி யதிராசர் கோஷ்டியின் சேவா காலம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம பூஜைகிருஷ்ணர் தொட்டில் வைபவம் தாலாட்டு பாட்டு பாடப்பட்டது.மாலை 6மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரண்டாம் நாள் வரைகாலை 7:00 மணிக்கு ஆசாரி யார் வரவேற்பும், காலை8.15 முதல் 12.15வரை மூல மந்திர ஹோமங்கள் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 5 மணி வரைகிருஷ்ணர் தொட்டில் வைபவம் தாலாட்டுநடந்தது.
மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிலம்பாட்டம் பொம்மலாட்டம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதன் ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி, அர்ச்சகர் கள் பாகவ தோதமார்கள்மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.








