மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிகாலை முதலே மக்கள் சிகிச்சை பெற நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படக்கூடிய திருமங்கலம் அரசு மருத்துவமனை பணிபுரியும் மருத்துவர்கள் மாற்றுப் பணிக்கு சிலரை அனுப்பி வைக்கப்பட்டதால், போதிய மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுவதுடன், சீட்டு பதிவதற்கும் நீண்ட நேரம் ஆகி வருவதால் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கும் நிலையும், கைக்குழந்தையுடன் அவதியுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.





