திண்டுக்கல்லில் முன் விரோதம் காரணமாக கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பேகம்பூரை சேர்ந்த ரகமத்துல்லா(23), முருகபவனத்தை சேர்ந்த ஜெயகார்த்திக்(21) அசனாத்புரத்தை சேர்ந்த சிராஜுதீன்(27) ஆகிய 3 பேர் முன் விரோதம் காரணமாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.





