மதுரை ஆவினில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 மண்டல ஆவின் அலுவலகங்களில்விற்பனையான தொகையைவரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரை ஆவினில் விற்பனை பொருட்களுக்கான தொகை சிவகங்கை சாலையில் உள்ள பிரதான கிளையில் வரவு வைக்கப்படும். சிவகங்கை சாலையில் உள்ள ஆவினின் கிளையில் தொகையை வரவு வைக்காமல் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதன்படி, ஆரப்பாளையத்தில் 21 லட்சம் ரூபாய், பி.பி.குளத்தில் 7 லட்சம் ரூபாய், பழங்காநத்தத்தில் 7 லட்சம் ரூபாய், முறைகேடு நடந்துள்ளது. 3 விற்பனை நிலையங்களில் வசூலான தொகையைபிரதான ஆவின்கிளையில் செலுத்தாமல் முறைகேடு நடந்துள்ளது.
35லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பாக பி.பி.குளம், ஆரப்பாளையம் ஆவின் கண்காணிப்பாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவின்மேலாளர் முத்து மாதவன்,குழு அமைத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.





