கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் சிவானந்தா காலனியில் காலை 10 மணி அளவில் கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் பொதுச் செயலாளர் சிவா ஐயப்பன் பொருளாளர் கோவை பாலாஜி கௌரவ ஆலோசகர் கே ஏ கருப்பசாமி ரத்தினபுரி மாலதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகள் நடிகர் திலகம் சிவாஜி திரு உருவப்படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி விஜயகுமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர் வி எம் சி மனோகரன் அவர்களும் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் அவர்களும் தொழிற்சங்க தலைவர் கோவை செல்வம் அவர்களும் மாநில நிர்வாகி பழைய செல்வராஜ் அவர்களும் பாசமலர் சண்முகம் அவர்களும் கே என் ஆறுமுகம் ராம நாகராஜ் குறிஞ்சி கனி வின்சென்ட் ஜே கே கிருஷ்ணசாமி ரத்தினபுரி பாலாஜி காலனி சிவா பெருமாள் சர்கிள் தலைவர் ரகுராமன் தன்ராஜ் ராஜமாணிக்கம் எல் ஐ சி நாகராஜ் தேசபக்தன் துரைசாமி உதயகுமார் கோவை ராதாகிருஷ்ணன் கருணாகரன் சிவாஜி செந்தில்குமார் காந்தி ஆறுமுக மணி ரத்தினபுரி சேகர் மகளிர் அணி தாரா ராஜம்மாள் சுப்புலட்சுமி மற்றும் காங்கிரஸ் செயலர்களும் சிவாஜி மாற்றத்தினர் கலந்து கொண்டார்கள். விழாவில் நலத்திட்ட உதவிகள் 50 பேருக்கு சேலைகள் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.




