• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,

ByPrabhu Sekar

Jul 17, 2026

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வந்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து மக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர்.

அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்தில் இருந்து விடுபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பூங்காக்கள் மற்றும் சாலையோரங்களில் இருந்த மரங்கள் மழையால் குளிர்ச்சியடைந்ததுடன், வெப்பத்தின் தாக்கமும் கணிசமாக குறைந்தது.

மழை காரணமாக சில இடங்களில் போக்குவரத்து மெதுவாக நடைபெற்றாலும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், வானிலை மாற்றம் காரணமாக அடுத்த சில நாட்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்திற்கு தற்காலிக நிவாரணம் அளித்த இந்த கனமழை, தாம்பரம் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.