திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் 46 தீர்மானங்களோடு துவங்கியது. மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி குறைகளை சுற்றி காட்டி பேசி வந்தனர். 17 தீர்மானங்கள் நிறைவேற்றி எழுதும்பொழுது வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் ஒன்று முதல் 46 தீர்மானங்களும் நிறைவேற்றியதாக தெரிவித்து கூட்டத்தை முடித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களும் வாசிக்கப்பட வேண்டும் என வைத்த கோரிக்கையை மேயர் அவர்கள் நிராகரித்து சென்றுவிட்டார். எனவே தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.





