• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

ByP.Thangapandi

Jul 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டி கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பழமையான ஊரணி, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்தாக கூறப்படுகிறது.,

இந்த ஊரணிக்கான நீர் வரத்து கால்வாய்கள் பொய்து போனதால் நாளடைவில், சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறியது., கடந்த 35 ஆண்டுகளாக கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி, சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது.

இந்த ஊரணியை மீட்டெடுக்க கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத சூழலில், கிராம மக்கள் தற்போதைய எம்எல்ஏ விஜய்-யிடம் ஊரணியை மீட்டெடுக்க கோரிக்கை வைத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஊரணியை மீட்டெப்பதற்கான முதற்கட்ட பணியாக கழிவுநீரை அகற்றும் பணியை எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஊரணியை தூர்வாரி, கழிவுநீர் செல்ல வடிகால் வசதியும், ஊரணியில் மழைநீர் தேங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார்.