மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள உலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்கள் வழங்கி பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள். எழுமலை காதிரியா முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருதீன் கூறும்பொழுது இத்திருவிழாவில் கலந்து கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது,

இதன் மூலம் எங்களிடயே அன்பும், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற பண்புகள் அதிகரித்துள்ளது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அமைதியான சமூக முன்னேற்றத்தை வளர்ப்போம் என்று கூறினார்.





