விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தெற்கு ஆனை கூட்டத்தில் இயங்கி வருகிறது.

நமது வாக்கு நமது குரல் என்ற தலைப்பில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்போம், ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல, என கோசமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




