கோவையில் இன்று நடைபெறும் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்2) இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில் இத்தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையத்தில் இத்தேர்வு நடைபெறுகிறது. இதனை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர்.

9:30 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 9 மணிக்குள் அனைத்து தேர்வாளர்களும் தேர்வு மையத்திற்குள் இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு அதன்படி அனைவரும் 9 மணி வரை தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் ஸ்மார்ட் வாட்ச் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதியில்லை என்பதால் காவல்துறையினர் தேர்வாளர்களின் உடமைகளை சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த வலது கை இழந்த கர்ப்பிணி பெண் மஞ்சுளா என்பவர் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளார்.






